Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointகனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
red pointஎன் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
red pointஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
red pointமரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
red pointமழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
red pointநழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
red pointஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
red pointசீதனம்.. வேதனை
கல்முனையான்
red pointகனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
red pointமுகமூடிகள்
அ. முகம்மது மீரான்
red pointமண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
red pointபூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
red pointஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
red pointஅரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
red pointஇல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
red pointமானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
red pointதவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
red pointமௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-03-15 
picture for poem
தோல்வி இல்லை.. உலகுக்கு உணவு
இரா.இரவி
  இவரின் பிற கவிதைகள்
 
தோல்வி இல்லை.. உலகுக்கு உணவு தரும் உழவர்கள்

01.
தோல்வி இல்லை
----------------------

விரக்தி வேண்டாம் விரட்டி விடு
கவலை வேண்டாம் களைந்து விடு

துக்கம் வேண்டாம் துரத்தி விடு
துயரம் வேண்டாம் துறந்து விடு

மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு
இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு

புன்னகை வேண்டும் சிரித்தே இரு
தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு

முயற்சி வேண்டும் வெற்றி பெறு
பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு

இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு
உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு

நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு
துடிப்பு வேண்டும் நரம்பில் அணிந்திரு

முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில்
முனைப்போடு முயன்றால் தோல்வி இல்லை உலகில்



02.
உலகுக்கு உணவு தரும் உழவர்கள்
--------------------------------------

உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள்
உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள்
வெயில் என்றும் மழை எனறும் பாராது
வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர்
மனிதர்களின் உயிர் வளர்க்கும் அட்சயப்பாத்திரங்கள்
மண்ணில் உயிர் வெறுத்து மாய்த்து மடிகின்றனர்
விவசாய நிலங்களை வெளிநாட்டவருக்கு விற்கின்றனர்
வாழ வழியின்றி விவசாயிகள் சாகின்றனர்
மண்ணின் மைந்தர்களுக்கு மண் சொந்தமில்லை
மேல் நாட்டவரின் பணத்தால் வந்தது தொல்லை
நிலத்தடி நீரை உறிஞ்சி கோடிகளை குவிக்கின்றனர்
நிலத்திற்கு நீர் பாய்ச்சிட இன்றி விவசாயிகள் துடிக்கின்றனர்
கடலில் வீணாக கலக்கும் நீரை தர மறுக்கின்றனர்
கண் கலங்கி பயிர்வாட விவசாயிகள் வாடிகின்றனர்
மரபணு விதைகள் என்று மலட்டு விதைகள் தருகின்றனர்
மறு விவசாயத்திற்கு பயன்படாத குப்பையை
விற்கின்றனர்
பூச்சி மருந்து பூச்சியை விட விவசாயிகளையே கொல்கின்றது
உரத்தின் விலையோ விவசாயிகளின் சக்தியை குறைக்கின்றது
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றனர் அன்று
விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கின்றனர் இன்று
விளை நிலங்களில் எல்லாம் வீடுகள் கட்டுகின்றர்
விரைவில் உணவுத்தட்டுப்பாடு உலகிற்கு வரும்
விவசாயி தழைத்தால் விவசாயம் தழைக்கும்
விவசாயம் தழைத்தால் உலகம் தழைக்கும்


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்