இன்னும் எத்தனையோ
தீர்ப்புகள் எழுதப்படாமல்....
கட்டிலுக்கும் சமயலறைக்கும்
மட்டுமே காவலாய்......
கூடவே
கைக்குட்டை முதல்
சுவர் கடிகாரம் வரையிலான
கவன ஈர்ப்பு தீர்மானத்தில்
கட்டாய வெளியேற்றம்....
கையில் குழந்தையும்
கண்ணில் நீருமாய்
கரைந்தோடும் வாழ்க்கை.....
மணமேடை ஏறும் வரை
கட்டிய கோட்டைகள்
கண்முன்பே சுக்கு நூறாய்.....
நிலவுக்கு போய் வரும்
பெண்களுக்கு இடையில்
நீர் எடுக்க போகவும்
நிறைய கட்டுப்பாடுகள்....