- ப.மதியழகன் |
|
| கீதையும் காதலும்... காதல்
01. கீதையும்... காதலும்... ----------------------------- மாலையிலே வீதிப் பாதையிலே மயிலென நடந்துவரும் வெண்மதியே உன்னை கோளநிலா அழைத்திடுமோ தன் காதல்தனை உதிர்த்திடுமோ உன் பால்வடியும் முகத்ததைப் பார்த்து வெண் சூரியன் தான் விலகி வழிவிடுமோ வில்லைப் போன்ற அந்த விழிகளைப் பார்த்து அந்த வானவில்லே மயங்கிடுமோ உன் எழிலான கூந்தலைப் பார்த்து அந்த மேகம் தனில் மழைவருமோ உன் இருவிழி பார்வை பார்த்து மின்னல் கண் சிவந்திடுமோ உன் எழில் கொஞ்சும் இடையைப் பார்க்க விண்மீன்கள் தரையில் இறங்கிடுமோ யாரும் தீண்டாத இந்த மெய்தனிலே கீதையின் புனிதம் அடங்கிடுமோ உன் கொஞ்சும் குரல் கேட்டு அந்த அலைகள் விண்ணைத் தொட்டிடுமோ உன் கனிவான் பார்லையில் அந்த புயலும் தென்றலாய் மாறிடுமோ உன் பாதச்சுவடு பட்டு இந்த மண்ணுலகம் சொக்கமாய் மாறிடுமோ உன் கைகள் என்னைத் தீண்டியதால் உன் உடலில் என்னுயிர் கரைந்திடுமோ உன் விழிகள் இரண்டு பார்த்துவிட்டால் அந்த எரிமலைகூட பனிப்பாறை ஆகிடுமோ உன் நெற்றிப்பொட்டை பார்க்கையிலே பூமியின் நிலவுதான் தேய்ந்திடுமோ 02. காதல் ---------- சூரியன் பார்வையில் உருகும் பனி போன்றது காதல் முழு நிலவில் வீசும் தென்றல் போன்றது காதல் குருவின் மீது கொள்ளும் பணிவு போன்றது காதல் கடவுள் மீது கொள்ளும் பக்தி போன்றது காதல் கரை காணா கடலின் அலை போன்றது காதல் விளக்கு திரியிலுள்ள சுடர் போன்றது காதல் இருளில் மின்னும் மின்னலின் ஒளி போன்றது காதல் நீயும் நானும் பிறந்ததற்கு காரணமாயிருந்தது காதல் |
|
| வார்ப்பு www.vaarppu.com |
|